என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 27 ஏப்ரல், 2013

சிந்தை கொண்டேன்..



மண்ணில் மரணிக்கவே 
மனிதம் கொண்டேன்-ஆயினும் 
சிந்தையிலோ தேவைகள் 
சில்லறையில் அத்துனையும் 
அடங்கிப் போகுமே கல்லறையில்...
விதை நெல்லை பசிக்கு புசித்திட்டால் 
வீசும் காற்றிலும் பஞ்சம் வீசாதா..
நாற்றாங்காலில் வசித்திட்டால் 
நாடும் நசாமாய் போகாதா.. 
ஆலகால விசமொன்று 
அமிர்தமாய் இனிக்கிறதே நாவில் 
மனிதம் பயணிக்கிறதே சாவில்...
பாட்டனோ நூறில் 
அப்பனோ அறுபதில்
நானோ நாற்பதில் 
நாளை எம் பிள்ளையின் சாவை அறிவேனோ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக