மண்ணில் மரணிக்கவே
மனிதம் கொண்டேன்-ஆயினும்
சிந்தையிலோ தேவைகள்
சில்லறையில் அத்துனையும்
அடங்கிப் போகுமே கல்லறையில்...
விதை நெல்லை பசிக்கு புசித்திட்டால்
வீசும் காற்றிலும் பஞ்சம் வீசாதா..
நாற்றாங்காலில் வசித்திட்டால்
நாடும் நசாமாய் போகாதா..
ஆலகால விசமொன்று
அமிர்தமாய் இனிக்கிறதே நாவில்
மனிதம் பயணிக்கிறதே சாவில்...
பாட்டனோ நூறில்
அப்பனோ அறுபதில்
நானோ நாற்பதில்
நாளை எம் பிள்ளையின் சாவை அறிவேனோ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக