என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

விசித்திரமானவன்

ஒரு பொழுதும் வெற்றி 
 
எமக்கு அவசியமில்லை - எம்மில் 
 
சமாதானமும் சண்டையும் 
 
என்றும் நிலைக் கொள்ளும்.
 
முதலில் தோற்பதும்,
 
விளிம்பில் வெல்வதும் என் வாடிக்கையாகும்..
 
எனவே தோல்விக் களைப்பும் 
 
வெற்றிக் களிப்பும் எம் 
 
உள்ளத்தில் ஒருசேர பயணிக்கும்....
 
பரிவு கொள்வோரும் பகைக் 
 
கொண்டோரும் எம்மில் 
 
நிரந்தரம் செய்வர் - எம்மை 
 
வீழ்த்தி வெற்றி கொண்டோரும் ,
 
எம்மில் வீழ்ந்து தோல்வி 
 
கண்டோரும் நட்புக்கொள்வர்...
 
அமிலமும் அமிர்தமும் அகத்தில் கொண்டவன் ,
 
விடைகளுக்கு வினாவளித்து
 
விளையாட்டும் விபரீதமும் ஒன்றிணைந்த
 
நான் சற்றே  விசித்திரமானவன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக