என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பிரபாகரன்

என் சுய நிலையின் 
ஆதியும் அந்தமும் உன் பொருட்டே
நீயே என் அடையாளம்...
உயிர் நிலையே வாழ்நிலை
கணக்கென்று கொண்டவனில் 
இன உணர்வை உள்தாழிட்டு 
எம் விடுதலை வேட்கையை 
உடைத்து வரச் செய்தவன் நீ...
எம் தன்னிலை விளக்கத்தை 
ஒற்றை வரியில் உரைப்பேன் 
---------------பிரபாகரன்----------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக