என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 27 ஏப்ரல், 2013

தென்னாடுடைய சிவனே ..



ஆலகாலத்தை கண்டத்தில் 
சுமந்தான்; இவனே ஈசன் 
எம் பேரினத்தின் நேசன்,
இனம் காக்கும் பொருட்டே 
ஆனான் சிவம்; அன்பிலும் சிவம் 
பகை முடிக்க ஆடினான் 
ருத்திரம் இவனில் எழுந்ததே 
ரௌத்திரம்...
பிட்டுக்கு மண் சுமந்தான்
ஈசன்;இவனோ மண்ணுக்கு 
இனத்தை சுமந்தான் 
துவக்கெடுத்து துவக்கினான் 
திருவிளையாடலை...
புலிகள் புடைசூழ தர்மத்தின் 
தலைமகன் தலையெடுத்தான்
எதிரிகளின் தலை எடுத்தான்
இனத்தில் களையெடுத்தான்..
தமிழின யுத்தம் தொடங்கினான் 
சற்றே அதர்மம் தலை தூக்கியதே
தவிர தர்மம் வீழாது..
மீண்டும் 
எம்மினத்தின் ஈசன் வருவான் 
பலியெடுக்க புலிகள் வரும்
'பிரபா' தாண்டவம் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக