என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 11 ஜூலை, 2012

அடைக்க படாத சிறை....

கதவுகள் திறந்தும்
வெளிவர முடிவதில்லை,,,,
சுதந்திரம் இருந்தும்
சுற்றிவர இயல்வதில்லை,,,
பெருங்காற்று வீசிய போதும்
சுவாசம் சீரடைய வில்லை..
அன்பென்ற அழகிய ஆயுதம்..
வடு தெரியாமல் வலி தருகிறது...
அன்னையாய் ,தமக்கையாய்..
தோழியாய் ,தோழனாய்..
ரூபத்தில் மாற்றம் கொண்டு தரும்
" அன்பு "
எமை இயங்கவிடாமல் இம்சிக்கிறது...
பற்றற்று வாழ விருப்பம் இருந்தும்
அடைக்கப்படாத சிறையாய் என் சுற்றம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக