தவமாய் தவமிருந்து
எம் தமிழ்த்தாய்
பெற்றெடுத்த
தமிழினத்தின் தலைமகன்....
மழைக்கு பின் மாதமாய்
பனிக்கு முன் மாதமாய்
திகழும் கார்த்திகையாம்
எம் தலைவன் பிறந்தான் ஒளியாய்,,,
இனம் காக்க அவனே வந்தான் புலியாய்...
இன உணர்வை உயிரில் கலந்தான்
உயிரை துச்சமென துயில் களைந்தான்..
செத்து செத்து சாவை சலிப்படைய செய்தான்...
எதிர்த்தவனை எமனிடம் நட்புற செய்தான்...
நேர் நின்று எதிர்க்க இல்லாமல் செய்தான்...
இன்று முதல் எம் பதிவுகள் தொடக்கம்,,
அவனை பற்றி
சிந்தித்தால் இல்லை சிந்தனையில் முடக்கம்...
அகிலத்தின் அத்தனை சரித்திரமும் அவனில் அடக்கம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக