என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 14 ஆகஸ்ட், 2013

மீண்டும் ஒரு அரங்கேற்றம்

இனத்தில் கருவாகி 
செருக்கில் உருவாகி 
உணர்வை உதிரத்திலும் 
நெருப்பை நெஞ்சிலும் 
சுமந்திட்டவன்
சுற்றத்தின் பார்வையில் 
முரணானவன்
சிந்தை சினத்தில் 
முதலானவன்...
இத்தருணம் 
லட்சியத்தில் லட்சத்தை 
தொலைத்து 
வெறுமையை மிச்சமாக 
கொண்டு  
வாழ்நிலையில் 
கடைநிலையை கைக் கொண்டு 
பயணிக்கிறேன்... 
எம்வாழ்வில் மீண்டும் 
ஒரு அரங்கேற்றம் நிகழும்...
அதுவரை 
ஐந்தாம் படையில் அணி சேர்வேன்
நிர்ணயித்த இலக்கு தூரமும் இல்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக