இனத்தில் கருவாகி
செருக்கில் உருவாகி
உணர்வை உதிரத்திலும்
நெருப்பை நெஞ்சிலும்
சுமந்திட்டவன்
சுற்றத்தின் பார்வையில்
முரணானவன்
சிந்தை சினத்தில்
முதலானவன்...
இத்தருணம்
லட்சியத்தில் லட்சத்தை
தொலைத்து
வெறுமையை மிச்சமாக
கொண்டு
வாழ்நிலையில்
கடைநிலையை கைக் கொண்டு
பயணிக்கிறேன்...
எம்வாழ்வில் மீண்டும்
ஒரு அரங்கேற்றம் நிகழும்...
அதுவரை
ஐந்தாம் படையில் அணி சேர்வேன்
நிர்ணயித்த இலக்கு தூரமும் இல்லை....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக