என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சிதிலடைந்த தேசம்

தித்திக்கும் கனவோடு 
எத்திக்கும் நிறைவாகி 
உதிரத்தில் உருவெடுத்த 
எம் சுதந்திரத்தின் 
சூத்திரம் உணராமலே 
சிந்தைக்குள் சிதறல்...
கட்டமைத்த தேசம்
முற்று பெறாமலே 
சிதிலடைந்து
முற்றுப் பெறாத முடிவுகள் 
முடிவுக்கு வராத வழக்குகள்
மட்டுமே நிரந்தரம்...
வக்கற்று நின்றோரை 
கரை சேர்க்க 
வழி இல்லா தேசம்
வல்லரசாகும் கனவோடு...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக