தித்திக்கும் கனவோடு
எத்திக்கும் நிறைவாகி
உதிரத்தில் உருவெடுத்த
எம் சுதந்திரத்தின்
சூத்திரம் உணராமலே
சிந்தைக்குள் சிதறல்...
கட்டமைத்த தேசம்
முற்று பெறாமலே
சிதிலடைந்து
முற்றுப் பெறாத முடிவுகள்
முடிவுக்கு வராத வழக்குகள்
மட்டுமே நிரந்தரம்...
வக்கற்று நின்றோரை
கரை சேர்க்க
வழி இல்லா தேசம்
வல்லரசாகும் கனவோடு...
உதிரத்தில் உருவெடுத்த
எம் சுதந்திரத்தின்
சூத்திரம் உணராமலே
சிந்தைக்குள் சிதறல்...
கட்டமைத்த தேசம்
முற்று பெறாமலே
சிதிலடைந்து
முற்றுப் பெறாத முடிவுகள்
முடிவுக்கு வராத வழக்குகள்
மட்டுமே நிரந்தரம்...
வக்கற்று நின்றோரை
கரை சேர்க்க
வழி இல்லா தேசம்
வல்லரசாகும் கனவோடு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக