என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 9 பிப்ரவரி, 2012

தூக்கம்..


நாளெல்லாம் 
பொழுதெல்லாம் 
நெருப்பாய் வீசினாலும்,,,
நிலா காலம் 
வந்தவுடன் வந்துவிடும் 
வரமாக தூக்கம்...
வரமாகும் ! தூக்கம் 
அளவாகும் போது !!!
மிதமாக கனாக்கள் 
வந்து செல்லும் ...
இடையே வினாக்களை 
உசுப்பி செல்லும்,,
மீதமான தூக்கம்
மீறி செல்லும்
நடை முறையை,,,
வரையற்ற உறக்கம்
வழிமுறையை மாற்றும் ...
ஆயுளில் அரை அளவை 
ஆட்கொள்ளும்..
ஆயுளின் நிரந்தரத்தை
உட்கொள்ளும்...
குடிசையும்  கோபுரமும்
பாகில்லை
இந்த நிரந்தர உறக்கத்திற்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக