நாளெல்லாம்
பொழுதெல்லாம்
நெருப்பாய் வீசினாலும்,,,
நிலா காலம்
வந்தவுடன் வந்துவிடும்
வரமாக தூக்கம்...
வரமாகும் ! தூக்கம்
அளவாகும் போது !!!
மிதமாக கனாக்கள்
வந்து செல்லும் ...
இடையே வினாக்களை
உசுப்பி செல்லும்,,
மீதமான தூக்கம்
மீறி செல்லும்
நடை முறையை,,,
வரையற்ற உறக்கம்
வழிமுறையை மாற்றும் ...
ஆயுளில் அரை அளவை
ஆட்கொள்ளும்..
ஆயுளின் நிரந்தரத்தை
உட்கொள்ளும்...
குடிசையும் கோபுரமும்
பாகில்லை
இந்த நிரந்தர உறக்கத்திற்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக