என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 1 பிப்ரவரி, 2012

வெற்று மனிதனடா !!!

வெற்று மனிதனடா நான்...
வீறு கொண்டு
வீணாகி போனேன்,,
துக்கம் தாளாமல்
துவண்டு போனேன்,,
குற்ற உணர்ச்சியில்
குறுகி போனேன்..

வாய் சொல்லில் வாள் வீசும்
வெற்று மனிதன் நான்..

உறவு காக்க
உணர்வற்று போனேன்..
உயிர் காக்க
உதிரம் வற்றி போனேன்..
எண்ணி வருந்தையில்
உயிரற்று போனேன்..
ஆயுதங்கள் பல தாங்கி
எனை காத்து கொண்டேனே !!!
இனம் காக்க முயலாமல் போனேனே...
நான் வெற்று மனிதனடா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக