என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 14 மார்ச், 2012

இனியும் தேவையா....

இந்தியன் என்று சொல்ல
இனியும் தேவையா !!!
எமது  தேச பற்று திசை மாறுகிறது..
இனம் காக்க துப்பில்லாதவன்
தேசத்தை நேசித்தென்ன லாபம்....
இனமே அழிந்தாலும் சேற்றில் மலர்ந்த..
செந்தாமரை போல் வீற்றிருக்கும் தமிழா !!
உணர்வில்லாமல் போக நீ என்ன சவமா ...
ரத்தம் சிந்தி உணர்வு கொள்ள வேண்டாம்..
சித்தம் விரிந்து இன உணர்வை உணர்த்தடா..
அகிலத்தை ஆண்ட இனம்..
அடிமையாய் போய் விடலாமா !!
வெள்ளையனுக்கு உள்ள உணர்வு கூட ...
நம்மவனுக்கு இல்லையே...
இனம் காக்க தவறிய இந்தியனே !!!
நீ என் உடன் பிறந்தோன் அல்ல....
சாட்சியாக கூட தயங்கும் இந்தியன் யாவரும்
ஒரு தாய் மக்கள் இல்லை...
எம்மினம் காக்க கை கொடுக்காத இந்நாடு..
எம் தாய் நாடில்லை....இந்நிலை விரைவில்
வரைபடத்தில் மாற்றம் காண வழிவகுக்கும்..
எம்மின நிலைமாற பூலோகத்தில் வழிபிறக்கும்.
இது எம்மினத்தின் சத்திய வாக்கு..
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக