என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 12 மார்ச், 2012

தமிழனும் தமிழினமும்...

களமாடிய கால்கள் கண்ணயர..
களவாடிய பொய்கள் விண்ணுயர...
காய்ந்து போனதே எம்மினம்.........

சமர்புரிந்து உலகால படைத்த சரித்திரம்..
நமர் தலை மீது எழுதாமல் எழுதி போன சாத்திரம்..
புரியாமல் போனதே இக்கணம்........

களம் கண்டவர்கள் காணமல் போக...
கண்டதாக சொன்னவர்கள் அரசாள...
வீணாகி போனதே கண்ட களங்கள்....

புரிந்து கொண்டால் மீதமாகும் ...
புரியாவிட்டால் சேதமாகும்...
தமிழனும் தமிழினமும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக