பனி மாதத்தில் தமிழன் பிணி..
போக்க புலியாக வந்தாய்..........
போக்க புலியாக வந்தாய்..........
துவண்ட தமிழினத்தை சுமக்க...
வேலுபிள்ளைக்கு பிள்ளையாய் வந்தாய்..
இருண்ட தமிழ் வானத்தில் ...
இளம்பரிதியாய் உதித்தாய்.....
யார் தமிழன் என்ற கேள்விக்கு..
இவன்தான் தமிழன் என்ற பதிலோடு வந்தாய்...
எங்கும் குட்டுப் பட்ட தமிழனில் ...
குன்றாய் நிமிர்ந்து நின்றாய்...
வழி கொண்ட தமிழரை ...
வழி நடத்தி சென்றாய்.....
ஓர் உயிர் உன்னதமானது...
அதனினும் தன்மானம் பெரிதென்றாய்....
இமயம் கண்ட சோழர்க்கு நிகராக....
புலிக்கொடி பறக்க செய்தாய்...
மரணத்தை வென்று காலத்தை...
கையில் கொண்டாய்....
நிகரில்லா தலைமை உனது வசம்...
தலைமையேற்க சடுதியில் வருவாய்..!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக