என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 3 செப்டம்பர், 2012

திருமணம்...


முடிந்து வைத்த சேலை வேட்டியில் 
துவங்கும் பந்தம்....
பந்தங்களை தொடர சொந்தங்கள் 
கூடும் தருணம்..
தருணங்கள் உருவாகும் புதியதொரு 
உலகிற்கு...
உலகறியும் உன் சுயத்தை இனி
ஈருயிர் கூடுதலில்...
கூடுதலில் உருவாகும் மனதில் 
புதிய சிறு சலனம்...
சலனமே வாழ்கையென்றால்
தோன்றுமே ஊடல்...
ஊடலை வென்றால்  வாழ்கையில் 
கிடைக்கும் தேடல்...
தேடலில் அமையும் உனக்கான  
அருமையான உறவு...
அப்பாற்பட்ட உலகு...
திருமணம்..
புரிதலில் வெற்றி...
இணைவதில் பெற்ற இன்பம் 
இறுதி வரை நிலைக்கும் 
இருவரின் மனதை ஒற்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக