முடிந்து வைத்த சேலை வேட்டியில்
துவங்கும் பந்தம்....
பந்தங்களை தொடர சொந்தங்கள்
கூடும் தருணம்..
தருணங்கள் உருவாகும் புதியதொரு
உலகிற்கு...
உலகறியும் உன் சுயத்தை இனி
ஈருயிர் கூடுதலில்...
கூடுதலில் உருவாகும் மனதில்
புதிய சிறு சலனம்...
சலனமே வாழ்கையென்றால்
தோன்றுமே ஊடல்...
ஊடலை வென்றால் வாழ்கையில்
கிடைக்கும் தேடல்...
தேடலில் அமையும் உனக்கான
அருமையான உறவு...
அப்பாற்பட்ட உலகு...
திருமணம்..
புரிதலில் வெற்றி...
இணைவதில் பெற்ற இன்பம்
இறுதி வரை நிலைக்கும்
இருவரின் மனதை ஒற்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக