வாழ்க்கையின் சுயநிலை விளக்கம்
அறியும் நேரம் இது....
காத்திருப்பின் காலம்
வீணானது அல்ல..மூளையின்
முனையை தட்டி விட்டு செல்லும்...
முடிந்து போனதை சிந்திப்பதை தவிர்க்கும்...
வருவதை எண்ணி சிந்தித்திருக்கும்..
காத்திருப்பின் பின்னணியை
சூழ்நிலை முடிவெடுக்கும்..
மாணவனுக்கு தேர்வு
காதலர்களுக்கு சேர்வு
மணமானவருக்கு சனன வரவு....
ஒட்டு மொத்த உறவுகளின்
எதிர்பார்ப்பின் உண்மை நிலை
சீவராசிகளின் பருவ நிலை...
இந்த காத்திருப்பு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக