என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

விந்தை மனிதா....


முப்படை கண்டு எப்படையையும் 
எதிர் கொண்ட எம் தலைவா
வித்தகங்கள் செய்த விந்தை மனிதா !!

வீழ்த்தி விட்டதாய் எக்காலம் செய்வார்கள்....
வீழ்ந்து போனதாய் பரிகாசம் கொள்வார்கள்...
புலிகளை காட்டில் நரிகள் நர்த்தனமாடும் நேரம் இது....

எச்சில் சோறு தின்று 
பிச்சை கொண்டு வாழ்வதை விட ....
மரணிக்கும் மகத்துவத்தை உணர்த்திய மானிடா ....
எம்மினம் உள்ளவரை நீ இருப்பாய் ...

எம்மை போல சாமானியனுக்கும் 
சத்தம் இல்லாமல் பித்தம் போக்கிவன் நீ...
உனை கண்டே கண் விழித்தேன்...
உனை கண்டே புத்துயிர்  கொண்டேன்...
உன்னாலேயே புத்துணர்வு கண்டேன்....

நீ இல்லாமல் போயிருந்தால் 
இன உணர்வு மட்டுமல்ல...
சுய உணர்வும் மீளாமல் சென்றிருக்கும்...

எம் உணர்ச்சிக்கு உணவு ஊட்டிய 
பச்சை தமிழனே !!
இன்றில்லாவிடிலும் என்றாவது 
உன் இலக்கு கிழக்கில் விடியும்......அச்சமயம் 
சமுத்திரத்தில் சரித்திரம் நிகழும்....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக