என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திர தினம்.....


சுதந்திர தினம்.....
ஒருங்கிணைந்த இந்தியாவை அமைத்து 
வெளியேறிய வெள்ளையனுக்கு நன்றி...
வேற்றுமையில் ஒற்றுமை காண முயன்ற 
எம் தலைவர்களுக்கு நன்றி....

இனி கூற எதுவுமில்லை என்பதே முன்னுரை...
உரைத்து சொல்லுமே அவலங்களை என்னுரை...
சுதந்திரத்தின் சூத்திரம் அறியாமல் 
வேற்றுமையில் ஒற்றுமை காணாமல் 
திக்கெங்கும் கோலாகலம்...
இந்தியன் என்று மதிமயங்கி 
உணர்வை உலையிலிடும் உற்சாகமான தினம் இது...
இன்றோடு முடிந்து போவதா !!
தேசப் பற்று...
எம்மினத்தின் சுதந்திரமே எமது பற்று...
ஆற்றுநீர் முதல் அரசாணை வரை வஞ்சம்...
இதை எவ்வாறு கொண்டாடும் எம் நெஞ்சம்,,,
ஈழம் முதல் மீனவன் வரை இல்லை உத்தரவாதம்..
எப்படி முளைக்காமல் போகும் பயங்கரவாதம்...
எம்மினத்தின் வீழ்ச்சியில் இத்தேசத்தின் எழுச்சியா !!
ஆயினும் உரைக்க உண்டு ஆயிரம் சங்கதி....
உணர்வுள்ள தமிழனுக்கு எம் தமிழ்த்தாயே கதி....
மறவாமல் சுதந்திரத்திற்கு 
விலையாக உயிரை வைத்த எம் தலைவர்களின்
பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக