என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நானா தமிழன் ?



அள்ளிவிட்ட  கட்டுக் கதையில் மயங்கி 
அடங்கா வீரத்தை அறிமையாமையில் முடக்கி,,,
சமீபமாக சரித்திரத்தை மறந்து போன நானா தமிழன் ?
ஏற்றதொரு கருத்தை எடுத்து வந்தால் 
மதத்தால் மறுப்பேன்...
கற்ற கையலவை சாதி கொண்டு சாதிப்பேன்,,,
நான்தான் திராவிடன்
நான்தான் இந்தியன் 
நான்தான் இந்து 
நான்தான் கிறிசுத்துவன்
நான்தான் இசுலாமியன் 
பல வண்ணகொடியில் நான் உள்ளேன்..
பல தலைவர்களின் தொண்டனாய்
கூத்தாடிகளுக்கு ரசிகனாய்...
இலவசத்திற்கு ஏங்கி நிற்கும் பிண்டமாய்..
நிச்சயமாக நிகழ போகும் 
மரணத்திற்கு அஞ்சி நிற்கும் 
என்னில் எங்கே உள்ளான் தமிழன்...
எம்மினத்தின் அடையாளம் எங்கே என்னில்...
செதுக்கி வைத்த சிற்பத்தில் 
மட்டுமே உள்ளான் தமிழன்.. 
நவீன தமிழன் நான்...
எம்மொழியின் 
ஆணிவேரை அடிவரை அசைத்தெடுப்பேன்....
இனி உணர்வாளர்களின் 
உணர்வை இறக்க செய்வேன்....
எம்பிள்ளைகளை அந்நிய மொழியில் 
கலக்க செய்வேன்,,,,
நாளை 
தமிழ் இனமொன்று இருந்ததை 
மாற்று மொழியில் அறிய செய்வேன்,,,,,
இதுவே எனது பிரதானம்....
(ஆதங்கத்தில் நான்.... நானும் எம்மினமும் வேறல்ல )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக