என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 18 ஆகஸ்ட், 2012

சிகரம்....



தடைப் பட்ட நீரும் 
உடைப் பட்ட போதில் 
உருவாகும் 
மின்சாரம்..
அது போலத்தான் நீயும் தோழா..
உணர்ந்தால் சிகரம் உன் வசம்...
சிகரத்தை சிரம் உயர்த்தி கண்டால்...
வென்று விடுவாய் உயரத்தை...
வான் நோக்கி செல்லும் உனது பாதம்...
நிதர்சனமாக ஆகாது சேதம்...
உனக்கே  உரித்தான செருக்கில் 
அளந்து விடு சிகரத்தின் சுற்றளவை...
ஆட்கொள்வாய் அகிலத்தின் பரப்பளவை....
ஒட்டுத் துளி குருதி சொட்டும் வரை தளராதே...
குருதி தீர்ந்து போயினும் உறுதி குறையாதே....
வள்ளுவன் வாக்கு பொய்த்து போகாது...
என்றைக்கும் வீழ்ந்து போகாது 
"தன்னம்பிக்கை".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக