தடைப் பட்ட நீரும்
உடைப் பட்ட போதில்
உருவாகும்
மின்சாரம்..
அது போலத்தான் நீயும் தோழா..
உணர்ந்தால் சிகரம் உன் வசம்...
சிகரத்தை சிரம் உயர்த்தி கண்டால்...
வென்று விடுவாய் உயரத்தை...
வான் நோக்கி செல்லும் உனது பாதம்...
நிதர்சனமாக ஆகாது சேதம்...
உனக்கே உரித்தான செருக்கில்
அளந்து விடு சிகரத்தின் சுற்றளவை...
ஆட்கொள்வாய் அகிலத்தின் பரப்பளவை....
ஒட்டுத் துளி குருதி சொட்டும் வரை தளராதே...
குருதி தீர்ந்து போயினும் உறுதி குறையாதே....
வள்ளுவன் வாக்கு பொய்த்து போகாது...
என்றைக்கும் வீழ்ந்து போகாது
"தன்னம்பிக்கை".

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக