என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 16 அக்டோபர், 2013

தமிழ்ச்சாதி...




கைக் கொண்டு 
இரும்பை 
வளைத்திட்ட தமிழ்ச்சாதி 
நாணல் போல் 
வளைந்திடவா நியதி !
கரையான் கூட்டில் 
கருநாகம் புகுந்திட
வாழ்வறியா போனச் சாதி

போரெடுத்து  
வேலெடுத்து 
வாளெடுத்து வீசி 
கயவர் தம் 
தலைக் கொய்த தமிழ்ச்சாதி 
துப்பாக்கி முனையில் 
வீழ்ந்திட்ட போதும் 
இல்லாமல் போனதே நாதி...

சமுத்திரம் கண்டு 
சரித்திரம் படைத்து 
கொலோன்றிய தமிழ்ச்சாதி 
சமுத்திரத்தில் 
மீனுக்கிறையென 
வீழும் மீதமே !
எவ்விதம் நிகழும் 
எம்மினத்தின் மீட்சி....

பட்சிகளும்
தமிழ்ச் சாதியும் 
ஒன்றானதே ! 
இருக்க இடமொன்று 
இல்லாமல் போனதே !
என் செயும் எம் தமிழ்ச்சாதி
அறிந்தோர் ஒருவர் உரைப்பீரோ...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக