கைக் கொண்டு
இரும்பை
வளைத்திட்ட தமிழ்ச்சாதி
நாணல் போல்
வளைந்திடவா நியதி !
கரையான் கூட்டில்
கருநாகம் புகுந்திட
வாழ்வறியா போனச் சாதி
போரெடுத்து
வேலெடுத்து
வாளெடுத்து வீசி
கயவர் தம்
தலைக் கொய்த தமிழ்ச்சாதி
துப்பாக்கி முனையில்
வீழ்ந்திட்ட போதும்
இல்லாமல் போனதே நாதி...
சமுத்திரம் கண்டு
சரித்திரம் படைத்து
கொலோன்றிய தமிழ்ச்சாதி
சமுத்திரத்தில்
மீனுக்கிறையென
வீழும் மீதமே !
எவ்விதம் நிகழும்
எம்மினத்தின் மீட்சி....
பட்சிகளும்
தமிழ்ச் சாதியும்
ஒன்றானதே !
இருக்க இடமொன்று
இல்லாமல் போனதே !
என் செயும் எம் தமிழ்ச்சாதி
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக