என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இன்றியமையாதவன்...

இன்றியமையாதவன்

எம் வாழ்வோடு ஒற்றி

ஒருங்கிணைந்தவன்

திக்கற்று தவித்தோனுக்கு

திசையறிவித்தவன்

வக்கற்று நின்றோனுக்கு

வாழ்வளித்தவன்

இவனே என்னில்

இன்றியமையாதவன்

எம்மில் அசையாமல்

வீற்றிருக்கும்

'தன்னம்பிக்கையே'அவன்,

அவனின்றி நான் அணுவும் அசைவதில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக