என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

'நல்லோரின் கரம் வலுக்கும்'

தர்மம் தலைகவிழ்ந்து 
வீழ்ந்துத்தான் போகுமா...
அறம் செய இலார் 
துர்காரியம் செயவே 
பெரும் பேரிடர் நிகழ்த்தவே 
அதர்மம் சிரம் உயர்த்தும்
அப்பேரிடரில் வீழும் தர்மம்...
தர்மத்தின் வாழ்வுதனை 
சூது கவ்வும்;
நிலையான செயலொன்று இலவே
அதையொற்றி அதர்மத்தின் 
வாழ்வும் நிலையானது இலவே;
நற்காரியம் புரிந்திடவே 
'நல்லோரின் கரம் வலுக்கும்' 
சமயமென்று தர்மம் 
சிரம் நிமிரும் மீண்டும்;
தருமம் மீண்டும் அதனை வெல்லும்
கயவர்களின் கயமை அகலும்....   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக