என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 18 செப்டம்பர், 2013

சாரல் வீசாயோ...

சில்லென்று சாரல் வீசாயோ 
எம் தாயே - தேகம் தன்னில் 
சில்லென்று வீசாயோ -  
அணையா அக்கினி 
சிந்தைக்குள் கருக் கொண்டது 
தேகத்தை கருவாய் கொண்டது 
இனமாய் 
மொழியாய் 
உறவாய் 
உதிரமாய் 
எம்மிலே அனைத்தும் 
நிலையாய் நிலைக் கொண்டது...
சாம்பலாகும் முன் சரித்திரம் 
படைத்திட எம் தாயே 
அணைத்திட சாரலாய் வீசாயோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக