என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தமிழன்னையே....

உணர்வில் உருகி
உயிரில் கலந்தாயம்மா நீ
என் ஊணில் அணுவாகி
உதிரத்தில் உரைந்தாயம்மா நீ
அகிலத்தில் அடைந்திட்ட 
பொழுதும், மண்ணுக்குள் 
புதைந்திட்டப் பொழுதும் 
உன் பெயர் சொல்லியே திரிவேனம்மா...
அன்னையாய்
ஆசானாய்
உற்றத் தோழியாய் எம்மில்
நிலைத்திட்ட தமிழன்னையே
நீயே எந்தன் வாழ்வின் விளக்கம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக