எண்ணிலடங்கா
ஒலிச் சித்திரங்கள்
செவி மடலில்...
ஆங்காரமாய் கோட்டான்களும்
ஆசுவாசமாய் குயில்களும்
ஆங்கங்கே அசை மடங்குகின்றன...
விமர்சிக்கும் மூடர்களும்
யாசிக்கும் வீணர்களும்
நேசிக்கும் நேசர்களும்
வியாபித்து விரைகின்றனர்...
சிந்தையோ தனிமையில்
செயலோ வெறுமையில்...
நேசிப்பவரும் துரோகிப்பவரும்
இனம் காண இயலாது
ஒற்றை வரிசையில்...
வாழ்வின் திசை தெரியாது
சிந்தைக்குள் சந்தை நிலைமை....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக