என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சிந்தைக்குள் சந்தை...

எண்ணிலடங்கா 
ஒலிச் சித்திரங்கள் 
செவி மடலில்...
ஆங்காரமாய் கோட்டான்களும் 
ஆசுவாசமாய் குயில்களும் 
ஆங்கங்கே அசை மடங்குகின்றன...
விமர்சிக்கும் மூடர்களும் 
யாசிக்கும் வீணர்களும் 
நேசிக்கும் நேசர்களும் 
வியாபித்து விரைகின்றனர்...
சிந்தையோ தனிமையில் 
செயலோ வெறுமையில்...
நேசிப்பவரும் துரோகிப்பவரும் 
இனம் காண இயலாது 
ஒற்றை வரிசையில்...
வாழ்வின் திசை தெரியாது 
சிந்தைக்குள் சந்தை நிலைமை.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக