என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 29 மார்ச், 2012

உணர்ச்சி...

ஐந்தறிவையும் ஆறறிவையும்
பிரித்து புரியவைக்கும்....
ஒன்பதாய் பிரிந்து
மானுடனை ஆட்டிப் படைக்கும்....
கட்டுப்பாடுகளை களைந்து
கட்டவிழ்த்து களைப்புற செய்யும்..
இந்திரியங்களை இடைமறித்து
இம்சையுற செய்யும்...
மிகையுற்றால் கண்களில்
நதி பெருக்கெடுக்கும்...
குறையுற்றால் வாழ்வின்
அர்த்தம் குறைவெடுக்கும்....
உணர்வுகளின் புதையல்
தூண்ட தூண்ட ஊற்றெடுக்கும்..
புரட்சிகளும் போர்களும்
பூகம்பமாய் உருவெடுக்கும்...
நாளமெல்லாம் சுருங்கி
சித்தம் தெளிய வைக்கும்...
உணர்ச்சி ....
இது இல்லாவிட்டால் ஏது எழுச்சி...

1 கருத்து: