உன் கைதன்னில் நீ..
புன்னகைப்பதும் புகழ் பெறுவதும்
ஆக்கம் செய்வதும் ஆறுதல் கொள்வதும்...
உன்னிடத்தே..
முழுமையுடன் முறுவலித்து
உன்னை நீயே செய்துகொள் சிறப்புடன்,,,
தச்சனும் கொல்லனும் உன்னுள்ளே...
சிந்தித்து சிறப்பை வெளிப்படுத்து...
குறைகளை அப்புறபடுத்து...
உன் கைதன்னில் நீயிருந்தால்
சிரமும் மணிமுடி தாங்கும்...
மனச்சிறைகளும் சிதிலடையும்.......
மணம்வீசும் பூக்களல்ல நீ !!
அந்தியில் வாடுவதற்கு.....
சீறி வாழும் சிங்கமல்ல நீ !!
ஐந்தறிவில் வாழ்வதற்கு...
தன்னை உணர்ந்து தன்னில் நிறைவு கொள்..
மனிதனாக !!!!!.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக