என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 9 ஜூன், 2012

உன் கைதன்னில் நீ..


உன் கைதன்னில் நீ..
புன்னகைப்பதும் புகழ் பெறுவதும் 
ஆக்கம் செய்வதும் ஆறுதல் கொள்வதும்...
உன்னிடத்தே..
முழுமையுடன் முறுவலித்து
உன்னை நீயே செய்துகொள் சிறப்புடன்,,,
தச்சனும் கொல்லனும் உன்னுள்ளே...
சிந்தித்து சிறப்பை வெளிப்படுத்து...
குறைகளை அப்புறபடுத்து...
உன் கைதன்னில் நீயிருந்தால் 
சிரமும் மணிமுடி தாங்கும்...
மனச்சிறைகளும் சிதிலடையும்.......
மணம்வீசும் பூக்களல்ல நீ !!
அந்தியில் வாடுவதற்கு.....
சீறி வாழும் சிங்கமல்ல நீ !!
ஐந்தறிவில் வாழ்வதற்கு...
தன்னை உணர்ந்து தன்னில் நிறைவு கொள்..
மனிதனாக !!!!!.......
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக