என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 15 ஜூன், 2012

வெறுமை,,,,


இது இன்றியமையாதது
மனித தேவையின் உச்சம்
வாழ்வின் மூலத்தின் மிச்சம்....
கடந்த வந்த தொலைவுகளின் படிவு...
என்றும் இதற்கு இல்லையே முடிவு...
மெய்யை சோதிக்கும்...
ஞானத்தை போதிக்கும்....
மனிதத்தின் மீதியை நிர்ணயிக்கும்,,,
மூளை சங்கமிப்பை பின்னிறுத்தும்....
உள் மனதை கட்டமைக்கும்...
ஆயுளில் முதலும் கடைசியும்
தொடக்கம் வெறுமையுடன்...
நிகழும் வெற்றிடம் உனக்குள்....
இனி நிகழ வேண்டாம் நமக்குள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக