என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 13 ஜூன், 2012

வாழ்க்கை...

வாழ தெரிந்தவருக்கு மட்டும்.....
வாடி போவதற்கே பூக்கும்
உணர்வுகளை வேடிக்கைக்கு சூடி கொண்டு...
அணுக்கள் சங்கமித்து
பிடி சாம்பலாய் போகும்
சதைகள் கூடிய உடம்பை போற்றி
வாழுகின்ற !!
நம்பிக்கையில்லா வாழ்க்கையில்
நம்பி வாழ தயக்கம்...
தயக்கத்தில் தொடங்கி மயக்கத்தில்
முடிந்து போகும் - இது
நிச்சயக்கப் படாத பயணம்...
தேவை அதில் நிதர்சனமான கவனம்......
இத்துனைக்கும் காரணம் நீளும் சலனம் !!!
வேண்டியதை பகுத்து...
அச்சத்தை புறத்திலும்
அஞ்சாமை அகத்திலும் வகுத்து...
சுற்றத்தை சுகத்தில் வளர்த்து...
முற்றத்தில் மூட்டைகட்டி வை
உன் அறியாமையை...
ஏற்றத்தில் செல்லும் உன் வாழ்க்கை...
உயிரோடு வாழ்வதல்ல...
உணர்வோடு வாழ்வதே வாழ்க்கை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக