என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 14 மே, 2013

எதிர்த்து நில் ...

இமை மூடி 
இருள் கூடி 
வழி தேடி 
மனம் வாடி 
வாழும் தோழா உணர்வாயா 
உன் உள்நிலையை...!
அடங்கிடாத அரிமாவும் 
அணைந்திடாத தணலும் 
உன் வசம் ,
உனையன்றி இனி எவர் வசம்...
எழுந்து நில் 
துணிந்து நில் 
எதிர்த்து நில் 
எதிர்த்தது காலன் எனினும்..
உயிர் நிலை கண்டு 
அச்சம் எதற்கு -அது 
துச்சம் நமக்கு...
வீழ்ந்தது போதும் 
வீரியம் கொண்டு எழு
இனி ஏற்றமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக