இமை மூடி
இருள் கூடி
வழி தேடி
மனம் வாடி
வாழும் தோழா உணர்வாயா
உன் உள்நிலையை...!
அடங்கிடாத அரிமாவும்
அணைந்திடாத தணலும்
உன் வசம் ,
உனையன்றி இனி எவர் வசம்...
எழுந்து நில்
துணிந்து நில்
எதிர்த்து நில்
எதிர்த்தது காலன் எனினும்..
உயிர் நிலை கண்டு
அச்சம் எதற்கு -அது
துச்சம் நமக்கு...
வீழ்ந்தது போதும்
வீரியம் கொண்டு எழு
இனி ஏற்றமே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக