வாழையடி வாழையாய்
தளைத்த எம் தமிழினம்
இன்று சாதிகளாலும்
மதங்களாலும்
கருகிய நிலையில்
அரசியல் அரிவாளால்
வெட்டு பட்டு போனதே...
கொத்து கொத்தாய்
குலை குலையாய்
கூட்டம் கூட்டாமாய்
செழித்த எம்மினம்
தன்னந்தனி ஆனதே...
வீழ்ந்து விட்ட விதையில்
சொட்டுநீர் பட்டு விடாதா !
இனியொரு நிகழ்வில்
அதிசயம் நிகழ்ந்திடாதா !
"இனியொரு விதி செய்வோம்"
என்றிட்ட எம் நாட்டு புலவன்
வாக்கு பலித்திடாதா !
கன்றுகளோடு வாழை தளைத்திடாதா !
ஏக்கத்துடன் நடை பயில்கிறேன்
எம் தமிழ் தோட்டத்தில்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக