என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 18 ஜனவரி, 2013

துணிந்து விட்டேன்.....


எதிர்மறைகளைத் 
துளைத்து எதிர்வரும் .
துயர்களை  மறைத்து,
கைக் கொண்டு ஆயுதம் பற்றி 
விதியெனும் வல்லோனை 
காலனிடம் சேர்ப்பேன்....
இனிவரும் எதிர்ப்புகளை 
சட்டை செய்வதில்லை....
கிளர்ந்தெழும் உணர்வுகளை 
உயிர்பிக்க செய்வதில்லை...
இனி 
எதற்கும் துணிந்து விட்டேன்.....
நட்புக் கொண்டு 
துரோகிப்பவரையும் 
எதிர்க் கொண்டு எதிர்ப்போரையும்
இம்மியளவும் சுவாசிக்க விடுவதில்லை...
என் போலிகளை உதறி 
அசலை அறிவிக்கும் நேரம் இது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக