எதிர்மறைகளைத்
துளைத்து எதிர்வரும் .
துயர்களை மறைத்து,
கைக் கொண்டு ஆயுதம் பற்றி
விதியெனும் வல்லோனை
காலனிடம் சேர்ப்பேன்....
இனிவரும் எதிர்ப்புகளை
சட்டை செய்வதில்லை....
கிளர்ந்தெழும் உணர்வுகளை
உயிர்பிக்க செய்வதில்லை...
இனி
எதற்கும் துணிந்து விட்டேன்.....
நட்புக் கொண்டு
துரோகிப்பவரையும்
எதிர்க் கொண்டு எதிர்ப்போரையும்
இம்மியளவும் சுவாசிக்க விடுவதில்லை...
என் போலிகளை உதறி
அசலை அறிவிக்கும் நேரம் இது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக