என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 31 ஜனவரி, 2013

நாடென்பார் ;


நாடென்பார் ; நீதியென்பார் 
நடுநிலையில் அமர்ந்து நான் 
நல்லவ னெனஉரைப்பார்...
உள்மனதில் வஞ்சம் வைப்பார் 
அதில் தீரா வழக்கொன்றை துவக்கி வைப்பார்...
பகுத்தறிவு பேசிடுவார் ; 
பல்லிளித்து சிரித்திடுவார் : நம்பியோரை 
நட்டாற்றில் நிறுத்திடுவார்...
தனித்து தன்னை காட்ட  
இனத்தை முன்னிருத்துவார்....
இவர்களையே தலைவரென 
எம்மக்கள் கொண்டாடிடுவர்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக