என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 31 ஜனவரி, 2013

மீண்டும்

காய் இழந்த இளமையில் 

பழத்தின் இனிப்பு...
வீழ்ந்த  விதையில் 
முளைத்தது விருட்சம்..
தடைப் பட்ட நீரில் 
உருவாகும் மின்சாரம்..
வெட்டிய வாழை இலையில் 
படைத்தது அறுசுவை..
உதிர்ந்த இலையில் 
மரத்தின் வசந்த காலம்..
இழந்த அத்துனையும் 
மீண்டும் சக்தி கொண்டு பெறுவதற்கே....
இரவு வணக்கங்கள் நட்புக்களுக்கு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக