என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 18 ஜனவரி, 2013

தைத் திருநாளாம்


தைத் திருநாளாம் 
அதுவே 
மொழியின் முதல் நாளாம் ....
நம்மினத்தின் திருநாளாம் ...
இனியும் 
நம்பிக்கை கொள்கிறேன் 
எம்மினமே
விழித்தெழுவாய் என !
இனாம் தன்னில் மயங்கி 
பாசாங்கு பந்தத்தில் 
சுருங்கிப் போன எம்மினமே ...
தரித்திரத்தில் 
சரித்திரம் படைத்தது போதும்... 
போலிகள் அசலாகி
நரிகள் நாடாளுவதை காண் ...
புலிகள் புற்களை தேடுவதை காண்...
சோறுடைத்த நாடு சோறுக்கலைவதை காண் ...
காண்பதற்கரிய காணாத 
காட்சியெல்லாம்  தாயகத்திலே...
இனி நிகழாமல் 
இத்தைத் திங்களில் 
பொங்கட்டும் இன உணர்வு...
ஆதித் தமிழர் புகழ் பரவட்டும்....
இனியொரு யுகம் படைப்போம் 
அதில் தமிழே முதலென உரைப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக