என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 29 டிசம்பர், 2012

நானும் எழுதுகிறேன்...





எழுத்துகளை கோர்த்து 
வார்த்தையை முன்னிறுத்தி 
இயன்றவரை 
இருதயத்தில் உள் நுழைந்து 
மெய்யுரைக்கும் எனது எழுத்து...
இன்னும் 
கன்னித் தமிழில் கரை சேரவில்லை..
ஆகவே 
கவிஞன் என்றுரைக்க மனமில்லை..
எனினும் 
ஆர்வத்தில் குறைவில்லை...
முடித்தது 
பள்ளிப் படிப்பை பாதியிலே..
ஆதலால் 
இலக்கணம் இல்லாமலே என் எழுத்து...
கூடியவரை 
நிகழாது எழுத்தில் கருத்துப் பிழை...
என்றும் எண்ணம் 
மொழியையே நினைந்திருக்கும்.. 
கவனம் 
இனத்தையே சார்ந்திருக்கும்...
சுற்றம் 
எடுத்துரைப்பேன் அச்சம் அகற்றி...

இன்றும் என்றும் 
எனக்குண்டான தேடலோடு நானும் எழுதுகிறேன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக