துவங்கும் எந்த செயலுக்கும்
முடிவின் நோக்கம் சமர்ப்பணமே.....
தாயின் தளிர்வு
பிள்ளைக்கு...
விதையின் வீழ்ச்சி
விருட்சத்திற்கு..
நதியின் ஓட்டம்
நற்பயிருக்கு....
எந்த முன்னுரைக்கும்
முடிவுரை உண்டு....
அது போலத்தான்
எச்செயலுக்கும் சமர்ப்பணம்,,,
எதிர்பார்ப்பை உள்வைத்து
சமர்ப்பிக்கும் எச்செயலும்
ஏமாற்றத்தை உயிர்விக்கும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக