என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 24 டிசம்பர், 2012

சமர்ப்பணம்..

துவங்கும் எந்த செயலுக்கும் 
முடிவின் நோக்கம் சமர்ப்பணமே.....
தாயின் தளிர்வு 
பிள்ளைக்கு...
விதையின் வீழ்ச்சி 
விருட்சத்திற்கு..
நதியின் ஓட்டம் 
நற்பயிருக்கு....
எந்த முன்னுரைக்கும் 
முடிவுரை உண்டு....
அது போலத்தான் 
எச்செயலுக்கும் சமர்ப்பணம்,,,
எதிர்பார்ப்பை உள்வைத்து 
சமர்ப்பிக்கும் எச்செயலும் 
ஏமாற்றத்தை உயிர்விக்கும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக