என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 17 டிசம்பர், 2012

நிழல்



மெய்யுரைக்கும் நம்மின் போலி,,,,
ஒளி நிற்கும் 
எதிர் திசையிலே அவதரித்து 
உருவத்தை உயிர்ப்பிக்கும்....
வண்ணங்களும் வடிவங்களும் 
நிலையல்ல 
எண்ணங்களும் சுற்றங்களும் 
மெய்யல்ல 
என்பதை ஒலியில்லாமல் 
ஒலித்து விட்டு செல்லும்..
பிரகாசத்தில் மட்டுமே 
உலகம் உன்னை அறியும் 
எனும் கூற்றுக்கு நிழலே சாட்சி...
மனிதனின் நிழல் 
ஒளியின் வீழ்ச்சி..
மரத்தின் நிழல் 
உயிர்களின் எழுச்சி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக