மெய்யுரைக்கும் நம்மின் போலி,,,,
ஒளி நிற்கும்
எதிர் திசையிலே அவதரித்து
உருவத்தை உயிர்ப்பிக்கும்....
வண்ணங்களும் வடிவங்களும்
நிலையல்ல
எண்ணங்களும் சுற்றங்களும்
மெய்யல்ல
என்பதை ஒலியில்லாமல்
ஒலித்து விட்டு செல்லும்..
பிரகாசத்தில் மட்டுமே
உலகம் உன்னை அறியும்
எனும் கூற்றுக்கு நிழலே சாட்சி...
மனிதனின் நிழல்
ஒளியின் வீழ்ச்சி..
மரத்தின் நிழல்
உயிர்களின் எழுச்சி....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக