என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 27 டிசம்பர், 2012

புத்தாண்டே...


புத்தாண்டே...
வாவென அழைக்கிறேன் உன்னை..

தமிழன் நான் என்ற பொழுதும் 
ஆங்கிலத்தான் அமைத்த 
உன்னை நம்பியே எம் பிழைப்பு...
ஆகவே 
ஆங்கிலப் புத்தாண்டே 
வேறு வழியின்றி அன்புடன் 
அழைக்கிறேன் உன்னை ...
உன்னை குறை கூற ஒன்றுமில்லை...
ஆதித்தமிழன் கண்ட எம்மோழி....
இன்று முளைத்த உனக்கா புரியும்...
எம்மீது பிழையுண்டு....
எம்மொழியும் எம்மினமும் 
வந்தாரை வாழவைத்தே பழகியது....
"முற்றத்து முல்லை மணக்காது"
என்ற மொழிக்கு நீயே சாட்சி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக