என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வியாழன், 27 டிசம்பர், 2012

இனத்தின் விநாசம்......


சுற்றம் சூழலில் 
மனிதம் குறைவே காண
காரணி கண்டிடவே 
இல்லை சமத்துவம் பேண 
இதுவே நிலைத்திட்டால் 
சாகும் நிலைக்கு வந்திடும்...
வீழும் தருணம் தந்திடும்...
அந்தோ பரிதாபம் என 
அயலான் சொல்ல கேட்டிடும்...
இனியொரு யுகம் பிறக்காது ,
காத்திருந்தால் கனி பழுக்காது,
தடியொன்றை எடுத்திடு ,
கனியாத கனியை அடித்திடு...
கை கொண்டு கேட்பின் யாசகம்,
அதுவே நம் இனத்தின் விநாசம்...... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக