என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 8 டிசம்பர், 2012

தவிப்பு...


உச்சபட்ச எதிர்பார்ப்பின் 
ஒருவிதமான ஏகாந்த நிலை...
நரம்பு மண்டலங்ககளின் இடம் மாற்றம் 
தருணத்தில்  நிகழும்....
இதயத்தின் துடிப்பு  
மூளையை சலவை செய்யும்....
கண்களில் சுரக்கும் நீர் 
அடிபாதத்திலும் சுரந்து 
நடையில் பிறழ செய்யும்...
நினைவில் தங்கிய நிகழ்ந்து போனதை
நிகழப்போகும் நிகழ்வுடன் ஒப்பிட்டு
நிகழாத கற்பனையை 
தருவிக்கும் இந்த தவிப்பு........
மிகைப்பட்ட உணர்ச்சியாய்
உள்மனதின்  கிளர்ச்சியாய் 
வருகையின் வாசலாய் 
இழப்பின் இறுதியாய் 
உருவெடுக்கும்....
நடவாத ஆசையில் உருவெடுப்பதல்ல
முடிவெடுத்த ஆசை நிகழாத போது நிகழும்
தவிப்பு....
தவிக்காத உயிர்கள் உணர்வற்றவையே,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக