என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அச்சம்..

தைரியத்தின் முதல்நிலை...
உயிர்களாய் பிறந்த 
சகலத்திற்கும் 
சொந்தமானது..
தனக்கென்று ஏதும் 
நேராதிருக்கும் 
வரை உள்ளிருக்கும்....
நிகந்த பின்னே வலுவெடுக்கும்...
வீரம் மிஞ்சும் 
நெஞ்சினிலும்...
சிறு துளியாய் நிறைந்திருக்கும்....
அச்சத்தை ஒட்டியே 
ஆலயங்களும் 
ஆராதனைகளும்....
போர்களும் 
அச்சத்தின் அதிகபட்சமே,,,
அஞ்சி நிற்கும் 
நிலையில் மட்டுமே 
மாற்றத்திற்கு 
மாறுதல் கிட்டும்....
அச்சம் இல்லாமை என்பதே 
அச்சம் 
உண்டு என்பதாலேயே,,,,
அச்சத்திற்கு எதிர் வினை வீரமன்று.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக