தைரியத்தின் முதல்நிலை...
உயிர்களாய் பிறந்த
சகலத்திற்கும்
சொந்தமானது..
தனக்கென்று ஏதும்
நேராதிருக்கும்
வரை உள்ளிருக்கும்....
நிகந்த பின்னே வலுவெடுக்கும்...
வீரம் மிஞ்சும்
நெஞ்சினிலும்...
சிறு துளியாய் நிறைந்திருக்கும்....
அச்சத்தை ஒட்டியே
ஆலயங்களும்
ஆராதனைகளும்....
போர்களும்
அச்சத்தின் அதிகபட்சமே,,,
அஞ்சி நிற்கும்
நிலையில் மட்டுமே
மாற்றத்திற்கு
மாறுதல் கிட்டும்....
அச்சம் இல்லாமை என்பதே
அச்சம்
உண்டு என்பதாலேயே,,,,
அச்சத்திற்கு எதிர் வினை வீரமன்று.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக