என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 25 டிசம்பர், 2012

எம் வாழ்வின் கூற்று....

வாழ்நிலையின் 
கடைநிலையை தொட்டுவிட 
முனைந்து விட்டேன்....
இனி நிகழ்வது 
மகத்துவமோ மரணமோ 
அனுபவித்து கொள்ள 
துணிந்து விட்டேன்...
நிகழும் நிகழ்வை 
நிகழ்த்தி விட 
உறக்கத்தை கை விடுவேன்...
இல்லையெனில் நிரந்தர 
உறக்கத்தை கைதொடுவேன்...
இதுவே எம் வாழ்வின் கூற்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக