தமிழில் இன்று சற்றே தடுமாற்றம்
வார்த்தை சேகரிப்பில் முடக்கம்
எத்தனிக்கும் எழுத்துகளில்
அவனை நினைந்தால் நடுக்கம்....
அவன் எழுத்து வீரியத்தில்
என் சிந்தனை வியர்த்து போனது..
தட்டு தடுமாறி அவனை நினைக்கிறேன்
அவனை புகழ கூட அருகதை இல்லாத தமிழனாய்...
இருப்பினும்
தலைநிமிர்ந்து சொல்கிறேன் வாழ்த்து
செந்தீயை நெற்றி பொட்டில் வைத்து
நாவில் கனலை கக்கிய
எம் ஒப்பில்லா நெருப்பு கவிஞன்
பாரதியின் பிறந்த நாள் ,,,,,
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக