என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நெருப்பு கவிஞன்


தமிழில் இன்று  சற்றே தடுமாற்றம்
வார்த்தை சேகரிப்பில் முடக்கம்
எத்தனிக்கும் எழுத்துகளில் 
அவனை நினைந்தால் நடுக்கம்....
அவன் எழுத்து வீரியத்தில் 
என் சிந்தனை  வியர்த்து போனது..
தட்டு தடுமாறி அவனை நினைக்கிறேன் 
அவனை புகழ கூட அருகதை இல்லாத தமிழனாய்...
இருப்பினும் 
தலைநிமிர்ந்து சொல்கிறேன் வாழ்த்து
செந்தீயை நெற்றி பொட்டில் வைத்து 
நாவில் கனலை கக்கிய 
எம் ஒப்பில்லா நெருப்பு கவிஞன் 
பாரதியின் பிறந்த நாள் ,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக