மதில் வைத்து
தன்னில் அடைந்து
கொண்ட இனியத் தோழா...
கருத்தொன்று சொல்லிடுவேன்
உரைக்க உரியவன் நான்...
நாளொன்று
தவறாமல் உண்டிடுவாய்
உளமார உழைத்திடுவாய்
உண்மை எதுவென
உணர்ந்திடுவாய்,,,இருப்பினும்
உள்ளத்தை உள்வைத்து
பூட்டெதற்கு...
உடைத்திட உன்னில்
உறுதியுண்டு...உணர்ந்திட
குருதியில் சுரமுண்டு...
வட்டத்தில் அடைந்திட
அற்பன் நீயல்ல....அறிவால்
அளப்பரிய அற்புதம் நிகழ்த்து...
அகன்று அகிலத்தை
அரையடியில் அளந்து
ஓரடியில் நிமிர்ந்து நில்,,,
காலுக்குள் பதுங்கியுள்ளது
பூமி...இனி நீ யாரென்று
காண்பி..
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக