என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 23 ஜனவரி, 2013

தாழிட்ட கதவு....


மதில் வைத்து 
தன்னில் அடைந்து  
கொண்ட இனியத் தோழா...
கருத்தொன்று சொல்லிடுவேன்
உரைக்க உரியவன் நான்...
நாளொன்று 
தவறாமல் உண்டிடுவாய் 
உளமார உழைத்திடுவாய் 
உண்மை எதுவென 
உணர்ந்திடுவாய்,,,இருப்பினும் 
உள்ளத்தை உள்வைத்து 
பூட்டெதற்கு...
உடைத்திட உன்னில் 
உறுதியுண்டு...உணர்ந்திட 
குருதியில் சுரமுண்டு...
வட்டத்தில் அடைந்திட 
அற்பன் நீயல்ல....அறிவால் 
அளப்பரிய அற்புதம் நிகழ்த்து...
அகன்று அகிலத்தை 
அரையடியில் அளந்து 
ஓரடியில் நிமிர்ந்து நில்,,,
காலுக்குள் பதுங்கியுள்ளது 
பூமி...இனி நீ யாரென்று 
காண்பி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக