தணல் தமிழா !! முத்து குமரா !!
நாங்கள் இழந்த வீரத்திற்கு
வித்தாகி போனாயே..
உன்னை இழந்து இழந்த
உரிமையை மீட்டெடுக்க மரித்தவனே...
உயிரை கொடுத்து உணர்வை
மீட்டி மீள செய்தவனே !!!!
குன்றில் நின்ற விளக்காய் எரிந்து சென்றாயே..
உன் தியாகத்தால் திடுக்கிட செய்தவனே..
உனக்கு பல ஆயிரம் கைகள் கூடி
வணக்கங்கள் வீரமாக கூப்பினாலும்
எங்கள் கரம் தன்னில் கறைகள்
ஆயிரம் உண்டு...
உன் இழப்புக்கு ஈடு செய்ய
ஈடாக உன்னை தொடர இழப்புகள் பல..
இத்துணை மரணத்திற்கும் மறுபதில் மறுப்பை
தவிர மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை..
இனி மரணித்து அல்ல !!! மரணம் விளைவித்தே
உணர்ப்பிக்க முடியும்,,
ஏனெனில் இது வரை இழப்பு எம்மில் மட்டுமே.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக