என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 28 ஜனவரி, 2012

தணல் தமிழா !! முத்து குமரா !!


தணல் தமிழா !! முத்து குமரா !!
நாங்கள் இழந்த வீரத்திற்கு 
வித்தாகி போனாயே..
உன்னை இழந்து இழந்த 
உரிமையை மீட்டெடுக்க மரித்தவனே...
உயிரை கொடுத்து உணர்வை 
மீட்டி மீள செய்தவனே !!!!
குன்றில்  நின்ற விளக்காய் எரிந்து சென்றாயே..
உன் தியாகத்தால் திடுக்கிட செய்தவனே.. 
உனக்கு பல ஆயிரம் கைகள் கூடி 
வணக்கங்கள் வீரமாக கூப்பினாலும்
எங்கள் கரம் தன்னில் கறைகள்
ஆயிரம் உண்டு...
உன் இழப்புக்கு ஈடு செய்ய
ஈடாக உன்னை தொடர இழப்புகள் பல..
இத்துணை  மரணத்திற்கும்  மறுபதில் மறுப்பை 
தவிர மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை..
இனி மரணித்து அல்ல !!! மரணம் விளைவித்தே 
உணர்ப்பிக்க முடியும்,,
ஏனெனில்  இது வரை இழப்பு எம்மில் மட்டுமே.....
தை திங்கள் பதினைந்து..போனது உன்னுயிர் மட்டுமல்ல !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக