என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 21 ஜனவரி, 2012

நட்பு நிலவரம்

வீழும் போது தாங்கும் நட்பு...
எழும் போது வீம்பாய் நிற்பதேன்...

நட்பூக்கள் கூடி களித்த தருணம்...சிறு
காற்றில் இதழ் இதழாய் உதிர்வதேன்...

முகம் தெரியாத போது முறுவலித்த நட்பு...
அகம் அடைந்த பின்பும் முகம் முறிப்பதேன்,,,

விழிகள் மூடி நின்ற போது வழி காட்டிய நட்பு..
இருவிழி திறக்க முயலும் போது முறியடிப்பதேன்..

எத்தனை இடர்கள் வந்தாலும் நீங்காது என் நட்பு,,,
இதை தக்கவர் புரிந்தால் இறங்காது அதன் மதிப்பு.........

1 கருத்து: