என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 7 ஜனவரி, 2012

நாளை நம் கையில்..

நம்பிக்கை கொள்...நாளை நம் கையில்..

சரித்திரம் படைத்திட நடையை தொடங்கு..

தரித்திரம் உடைத்து நாணயம் காத்து பழகு..

நான் என்ற சொல் தவிர்த்து நாம் என்று முழங்கு..

நாவை அடக்கி நறுக்கென்று பேசி அரணாய் விளங்கு..


நட்பில் நல்லதை சேர்த்து தீயதை விட்டு விலகு...

சந்ததி  நலம் வாழ
நல்லதோர்  நாட்டை உருவாக்கு...

பல மொழி பேசு நல்லதோர் தமிழை என்றும்  நல்கு...

எங்கும் பறந்து விரிந்து நம்மின புகழை பரப்பு...

என்றும் எங்கும் நம்பிக்கை கொள்...நாளை நம் கையில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக