உலர்ந்து போன ஆசைகள்
அண்டி அரசாலும் ..
நிற்கதியில்லாமல் போன
நிம்மதிகளின் இருப்பிடம்...
மாற்றுமொரு வாழ்க்கையின்
நித்திரை தேசம்..
இது
ஆண்டியை கூட
அரசனாக்கும்..
ஆழ்மனதின் அதிசய
கூடாரம்..
பொய்த்து போகும்
உண்மையின் உறைவிடம்..
கரைந்து போகும்
கற்பனைகள் உலா வரும்..
வேட்கை கொண்ட மனிதரிடம்
வேடிக்கை காட்டும்..
பதிலை கொடுத்து வினாவை
விளைவிக்கும்..
துக்கம் கொண்டவருக்கு
தூரிகை கொண்டு தாலாட்டும்..
தூக்கம் கொண்டவருக்கு
காரிகை கொண்டு கலைக்கும்..
அளப்பரிய ஆனந்தத்தை தரும்..
துணிச்சல் காரனையும்
திடுக்கிட வைக்கும்..
"வரமோ" "சாபமோ" கனவுகள் என்றும்
நமை சூழ்ந்து கொள்ளும்,,,
"வரமோ" "சாபமோ" கனவுகள் என்றும்
பதிலளிநீக்குநமை சூழ்ந்து கொள்ளும்,,,இவ்வரிகள் அற்புதம் நண்பா......