என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

திங்கள், 23 ஜனவரி, 2012

..கனவுகள்..


உலர்ந்து போன ஆசைகள் 
அண்டி அரசாலும் ..
நிற்கதியில்லாமல் போன
நிம்மதிகளின் இருப்பிடம்...
மாற்றுமொரு வாழ்க்கையின் 
நித்திரை தேசம்..
இது
ஆண்டியை கூட 
அரசனாக்கும்..
ஆழ்மனதின் அதிசய 
கூடாரம்..
பொய்த்து போகும் 
உண்மையின் உறைவிடம்..
கரைந்து போகும்
கற்பனைகள் உலா வரும்..
வேட்கை கொண்ட மனிதரிடம்
வேடிக்கை காட்டும்..
பதிலை கொடுத்து வினாவை 
விளைவிக்கும்..
துக்கம் கொண்டவருக்கு 
தூரிகை கொண்டு தாலாட்டும்..
தூக்கம் கொண்டவருக்கு
காரிகை கொண்டு கலைக்கும்..
அளப்பரிய ஆனந்தத்தை தரும்..
துணிச்சல் காரனையும் 
திடுக்கிட வைக்கும்..
"வரமோ" "சாபமோ" கனவுகள் என்றும்
 நமை சூழ்ந்து கொள்ளும்,,,

1 கருத்து:

  1. "வரமோ" "சாபமோ" கனவுகள் என்றும்
    நமை சூழ்ந்து கொள்ளும்,,,இவ்வரிகள் அற்புதம் நண்பா......

    பதிலளிநீக்கு