என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

சுபாசு சந்திர போசு



சுபாசு சந்திர போசு 
ஐயா உன் பெயரை சொன்னால் 
எனக்கல்ல எம் வீட்டு பூனைக்கு கூட 
புல்லரித்து போகுதய்யா !!
துணிச்சல் கூட உன்னிடம் பிச்சை கேட்குமே..
வீரம் கூட வியர்த்து போகுமைய்யா ..
மரணம்  கூட உன்னிடம் மரணித்து போனதே..
மண்ணில் இறப்பதற்கே பிறப்பவனிருக்க
நீ பிறந்து இறவா வீரம் எமக்கு அளித்தாயே !!
ஒரிசாவில் பிறந்த ஒளிசுடரே ..
வங்கத்தில் சீற்றம் கொண்ட வேங்கையே !!
ஒட்டுதுளி குருதி சொட்டும் வரை..
உறுதி கொண்ட கட்டுகடங்கா வீரனே !!
உன்னை கொடுத்து எம்மை காத்த
லட்சிய பூமியே !!
அடிமை இந்தியனை அடங்கா இந்தினாய் 
மாற்றிய மகத்துவம் உன்னையே சேரும்..
நீ பற்ற வைத்த நெருப்பில் 
குளிர் காய்ந்து பெற்றோம் சுதந்திரம்..
அது நீயில்லாமல் போகவே இல்லையே நிரந்தரம்..
உன்னை தொடர்ந்தவரெல்லாம் 
மண்ணில் புதைந்து போக..
மறந்தவேரெல்லாம் மணிமுடி தாங்க ..
மதிகெட்டு மண்ணாகி போனதே உனது லட்சியம்...
""ஆகவே மீண்டும் உன் பிறப்பு அவசியம்...""
நின் பிறப்பு வீரத்தை விதைத்து விளைத்தது..
விளைந்த பயிரில் சில வீணாகி போனாலும்
பல வீரியம் கொண்டு விதைகளை தாங்கி நிற்கிறது..
அறுவடை தொடங்க நாட்கள் தூரமில்லை..
அந்நிலையில் மீண்டும் நீ உதித்தால் வெற்றி எம் கையில்..
வீரத்தை விளைத்த தலைவணங்கா 
தலைவனுக்கு 
தலைவணங்குகிறேன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக